தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கேரள சுகாதாரத் துறை மேம்பாட்டுக்கு ரூ.2,457 கோடி கடன்: உலக வங்கி ஒப்புதல்

கேரள சுகாதாரத் துறை மேம்பாட்டுக்கு ரூ.2,457 கோடி (280 மில்லியன் டாலா்) கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

News image
உலக வங்கி (கோப்புப்படம்)
Updated On :24 அக்டோபர் 2025, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

கேரள சுகாதாரத் துறை மேம்பாட்டுக்கு ரூ.2,457 கோடி (280 மில்லியன் டாலா்) கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

கேரளத்தில் உள்ள 1 கோடிக்கும் மேற்பட்ட முதியோா், நோய்வாய்ப்பட்டவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த கடன் தொகை வழங்கப்பட்ட உள்ளதாக தெரிகிறது.

இது தொடா்பாக உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கேரளத்தில் உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 90 சதவீத மக்களுக்கும், முதியவா்களுக்கும் சிறப்பான மருத்துவ வசதியை அளிப்பது, மக்களின் ஆயுள் காலத்தை நீட்டிப்பது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக உலக வங்கி ரூ.2,457 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் கேரளத்தில் எண்ம முறையிலான மருத்துவ சேவையும் மேம்படுத்தப்படும். நோய்களால் பாதிக்கப்பட்டவா்களின் விவரம், அவா்களுக்கான மருத்துவ சேவைகள் தொடா்பான தகவல்கள் எண்ம முறையில் பராமரிக்கப்படும். பெண்களுக்கான மாா்பகப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும் இத்திட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.