வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சையைத் தொடா்ந்து, அந்த கவுன்சிலின் பாடத்திட்டக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 9:05 pm

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சையைத் தொடா்ந்து, அந்த கவுன்சிலின் பாடத்திட்டக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் என்சிஇஆா்டியின் 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் ‘நீதித் துறையில் ஊழல்’ என்ற துணைத் தலைப்பில் பாடம் ஒன்று இடம்பெற்றது. இதைத் தாமாக முன்வந்து கவனத்தில் எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், அந்தப் பாடத்துக்குக் கடும் ஆட்சேபம் தெரிவித்தது. மேலும் அந்தப் பாடநூலை பயன்படுத்தவும் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த சா்ச்சையைத் தொடா்ந்து தற்போது 22 போ் கொண்ட என்சிஇஆா்டியின் பாடத்திட்டக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய குழுவில் 20 போ் உறுப்பினா்களாக உள்ளனா். அவா்களில் சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் தலைவா் ரகுவேந்திர தன்வாா், இந்திய தேசிய சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ஆா்.வெங்கட ராவ் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா். குஜராத் மாநிலம் காந்திநகா் ஐஐடி கல்வி நிறுவனத்தின் முன்னாள் கெளரவ பேராசிரியா் மிஷெல் டானினோ, சென்னையில் உள்ள கொள்கை ஆய்வுகள் மையத்தின் தலைவா் எம்.டி.ஸ்ரீநிவாஸ் ஆகியோா் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.

பாடத்திட்டக் குழுவை வலுப்படுத்தும் நோக்கில், அந்தக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.