இளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?2021 தேர்தலில் பல வித்தைகள் காட்டிய நோட்டா! இந்த முறை?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தத் தடை நீட்டிப்பு!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்துவதற்கானத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தத் தடை நீட்டிப்பு - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 10:03 am

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானங்கள் தனது வான்வழியை பயன்படுத்துவதற்கு ஏப்ரல் 24 வரை பாகிஸ்தான் தடை விதித்திருந்த நிலையில் தற்போது அந்தத் தடையை மே 24 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு நடைபெற்ற பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்தது. தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது இந்தியா குற்றச்சாட்டு வைத்தது.

இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் தங்களின் வான்வழியைப் பயன்படுத்த எதிரி நாட்டு விமானங்களுக்கு அனுமதி மறுத்தன.

பெஹல்காம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்த பாகிஸ்தான் வெளிப்படையான விசாரணைக்கு அழைப்பு விடுத்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் 2025 ஏப்ரல் 24 முதல் இந்திய விமானங்களுக்கான தனது வன்வழியை மூடியதால் இந்திய விமான நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தடையால் இந்திய வர்த்தக விமான நிறுவனங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

ஏனெனில், இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து அந்தத் தடையை மேலும் ஒரு மாத காலம் நீட்டித்து பாகிஸ்தான் விமானத் துறை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன்னதாக, 1999 கார்கில் போர் மற்றும் 2019 புல்வாமா தாக்குதலின் போது இரு நாடுகளும் பரஸ்பரம் வான்வழியை மூடின.

Summary

Pakistan extends airspace ban on Indian airlines till May 24

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.