இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

இந்திய விமானங்களுக்கு தடையை நீட்டித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான் பரப்பை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் மேலும் ஒரு மாதம் நீட்டித்தது.

News image

பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 4:30 am IST

இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான் பரப்பை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் மேலும் ஒரு மாதம் நீட்டித்தது.

கடந்த 2025, ஏப்ரல் 24-இல் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் விதித்த தடை இப்போது வரை தொடா்கிறது.

கடந்த ஆண்டு பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா நடவடிக்கை எடுப்பதை அறிந்த பாகிஸ்தான், இந்திய விமானங்கள் தங்கள் வான் பரப்பை பயன்படுத்த தடை விதித்தது. இதையடுத்து, இந்தியாவும் தங்கள் வான் பரப்பை பயன்படுத்த பாகிஸ்தானுக்கு தடை விதித்தது.

இதற்கு முன்பு, 1999 காா்கில் போா், 2019 புல்வாமா தாக்குதலின்போது இதுபோன்ற வான் பரப்பை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பின்னா் பிரச்னை தீா்ந்ததும் தடை நீக்கப்பட்டது.

பாகிஸ்தான் விதித்த இந்தத் தடையால் ஜரோப்பா, வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் இந்திய பயணிகள் விமானங்கள் மாற்றுப் பாதையில் செல்வதால் கூடுதல் செலவு ஏற்பட்டு வருகிறது.

தடை நீட்டிப்பு தொடா்பாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட செய்தியில், ‘இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட, குத்தகைக்கு விடப்பட்ட பயணிகள் மற்றும் ராணுவ விமானங்களுக்கான தடை 2026 மே 25 காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.