திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

தேர்வு முறைகேடுக்கு எதிராக போர்க்கொடி: ஜார்க்கண்டில் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்!

சட்டப்பேரவையை நோக்கி பேரணியைத் தொங்கியுள்ளது தொடர்பாக..

News image

ஜார்க்கண்ட் - -

Updated On :10 ஆகஸ்ட் 2026, 12:44 pm IST

ஜார்க்கண்டில் பல்வேறு பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சட்டப்பேரவையை நோக்கி பேரணியைத் தொங்கினர்.

இப்பிரச்னைக்காக ஒன்பது நாள்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் ஜேஎல்கேஎம் அமைப்பின் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ உடல் எடை 10.5 கிலோ குறைந்த நிலையிலும், ஆம்புலன்ஸ் வாகனத்தில் அமர்ந்தபடி இந்தப் பேரணியில் பங்கேற்றார். இந்த பேரணியின்போது முன்னாள் முதல்வர் சிபு சோரனின் உருவப்படத்தைக் கையில் ஏந்தியிருந்தனர்.

போராட்டத்தில் 17-வது நாளில் மூவர்ணக் கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

முதல்வர் ஹேமந்த் சோரனின் 51-வது பிறந்தநாளன்று நடைபெற்ற இந்தப் பேரணி, துர்வாவில் உள்ள பழைய சட்டப்பேரவை வளாகத்திற்கு வெளியே தொடங்கியது. போராட்டக்காரர்கள் புதிய சட்டப்பேரவை கட்டடத்தை சென்றடையத் திட்டமிட்டுள்ளனர்.

சட்டப்பேரவை வளாகத்தில் தடை உத்தரவுகள் பிறக்கப்பட்டதோடு, 4 கி.மீ. தூரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிலைமையை மூத்த அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

விரைவு அதிரடிப் படை, இந்திய ரிசர்வ் பட்டாலியன், மாவட்டக் காவல் துறை மற்றும் விரைவு எதிர்வினைக் குழு ஆகியவற்றைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நகரில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. போராட்டக்காரர்களுடன் அரசு பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும், இதுவரை சுமுக தீர்வு எட்டப்படவில்லை.

கடைசிக் கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, போராட்டக்காரர்களின் கோரிக்கைகளில் 98 சதவீதத்தை ஏற்றுக்கொண்டதாக அரசு தெரிவித்தது. இருப்பினும், ரத்து செய்யப்பட வேண்டும் என்று தாங்கள் கோரிய 13 தேர்வுகளில் மூன்றை மட்டுமே ரத்து செய்ய அரசு ஒப்புக்கொண்டதாகப் போராட்டக்காரர்கள் கூறினர்.

சிபிஐ விசாரணைக்கான எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை நாங்கள் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்று ஜேபிஎஸ்சி-ஜேஎஸ்எஸ்சி (ஜெபிஎஸ்சி - ஜெஎஸ்எஸ்சி) சீர்திருத்த மன்றத்தின் தலைவர் ரவீந்திர பாஸ்வான் கூறினார்.

ஜார்க்கண்ட் பொதுப் பணி ஆணையம் மற்றும் ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றில் விரிவான சீர்திருத்தங்களைச் செய்யுமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், 14-வது ஜார்க்கண்ட் பிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு உள்ளிட்ட பல பணி நியமனத் தேர்வுகளை ரத்து செய்யவும், முறைகேடுகள் குறித்த புகார்கள் மீது சிபிஐ அல்லது மாநிலத்திற்கு வெளியேயுள்ள ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவைக் கொண்டு சுதந்திரமான விசாரணை நடத்தவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Thousands of job aspirants, protesting alleged irregularities in various recruitment examinations in Jharkhand, began their march to the state assembly on Monday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.