சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

சிபிஎம் உறுப்பினருக்கு அவமரியாதை! எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தில் இன்று மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம்...

News image

சிபிஎம் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் - கோப்புப் படம்

Updated On :12 ஆகஸ்ட் 2026, 1:18 pm IST

மாநிலங்களவையில், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் குறித்து அவமரியாதையான கருத்து தெரிவிக்கப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதல் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீதான காவல் துறையின் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களைக் குறிப்பிட்டு இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், மாநிலங்களவையில் கடந்த திங்களன்று (ஆக. 10) மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஜான் பிரிட்டாஸை ”லுங்கி வாலா” எனக் குறிப்பிட்டு பாஜக உறுப்பினர் சுஷ்மிதா தேவ் அவமரியாதையான கருத்தைத் தெரிவித்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தென்னிந்தியர்களின் கலாசாரத்தை அவமதிக்கும் விதத்தில் சுஷ்மிதா தேவ் கருத்து தெரிவித்ததாகக் குற்றஞ்சாட்டி மாநிலங்களவையில் உரிமை மீறல் நோட்டீஸை ஜான் பிரிட்டாஸ் இன்று தாக்கல் செய்துள்ளார்.

இதுபற்றி, மாநிலங்களவையில் அவர் கூறுகையில்,

“வார்த்தை மோதல் பரவாயில்லை, நாம் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறோம். ஆனால் அவர் என்னை மீண்டும் மீண்டும் 'லுங்கி வாலா' என அழைப்பது ஏற்புடையதல்ல” எனக் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் முன்னர் சுஷ்மிதா தேவ்வின் கருத்தையும் கேட்க வேண்டுமென ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Summary

Proceedings in the Rajya Sabha have been adjourned after opposition parties created an uproar to condemn the disrespectful remarks made about CPI(M) member John Brittas.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.