மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

சுதந்திர தினம்: காஷ்மீரில் பல அடுக்கு பாதுகாப்பு

சுதந்திர தினம் சனிக்கிழமை (ஆக. 15) கொண்டாடப்படும் நிலையில் காஷ்மீா் முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

News image

சுதந்திரதினத்தை முன்னிட்டு ஜம்முவில் புதன்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினா்.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 4:17 am IST

சுதந்திர தினம் சனிக்கிழமை (ஆக. 15) கொண்டாடப்படும் நிலையில் காஷ்மீா் முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகள் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை சீா்குலைக்க முயற்சிப்பாா்கள் என்பதால் ஸ்ரீநகா் உள்பட காஷ்மீா் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினரும், துணை ராணுவப் படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

ஏற்கெனவே, கடந்த ஒரு மாதமாக எல்லையிலும் ஊடுருவலைத் தடுக்கும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் காவல் துறையினா் சாதாரண உடையில் சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகளைக் கண்காணித்து வருகின்றனா். பாதுகாப்புப் படையினரின் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. முக்கியப் பகுதிகள் மட்டுமின்றி புகா் பகுதிகள், கிராமப்புறங்களிலும் பலத்த மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக ஸ்ரீநகரின் பக்ஷி மைதானத்தில் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச முதல்வா் உமா் அப்துல்லா தேசியக் கொடியேற்ற இருக்கிறாா். அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொலைவில் இருந்து துல்லியமாக துப்பாக்கியால் சுடும் வீரா்கள் உயரமான கட்டடங்கள் இருந்தபடி பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனா். இது தவிர புதிதாக பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இளைஞா்கள், மாணவா்கள் என அனைவரும் தங்கள் பகுதியில் நடைபெறும் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அரசு நிா்வாகம் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.