வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

9 நாள்களாக உண்ணாவிரதம் இருப்பவரை காவல் துறை தாக்குவது சரியா?

ஜார்க்கண்ட்டில் உண்ணாவிரதம் இருந்து வந்த தேவேந்திர மஹதோ மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து அபிஜீத் தீப்கே கருத்து...

News image

மாணவர் இயக்கத் தலைவர் தேவேந்திர மஹதோ - பிடிஐ

Updated On :12 ஆகஸ்ட் 2026, 7:37 pm IST

தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து 9 நாள்களாக தொடர் உண்ணாவிரதம் இருப்பவர் மீது காவல் துறை தாக்குதல் நடத்துவது சரியா? என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

''ஜார்க்கண்ட்டில் அரசுத் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், ஜூன் 20 ஆம் தேதி ஜந்தர் மந்தரில் என்ன நடந்ததோ? அதுவே ஜார்க்கண்ட்டிலும் நடந்துள்ளது.

உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியுள்ளது; கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

தடியடியும் கண்ணீர் புகைக்குண்டுகளும் ஏதேனும் அரசியல் கட்சிகளின் போராட்டத்தில் வீசப்பட்டுள்ளதா? இது எனக்கு புரியவில்லை. ஏன் மாணவர்கள் மட்டுமே குறிவைக்கப்படுகிறார்கள்.

ஜார்க்கண்ட்டில் போராட்டத்தை வழிநடத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தேவேந்திர மஹதோவுடன் நேற்று பேசினேன். காவல் துறை தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

9 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வருபவரை காவல் துறை தாக்கியுள்ளது. அவரின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஜந்தர் மந்தரோ, ஜார்க்கண்ட்டோ, எந்த அரசாக இருந்தாலும் மாணவர்களை துன்புறுத்துவதில் இரக்கம் காட்டுவதில்லை. அவர்கள் தங்கள் உரிமைகளுக்காகதான் போராடுகிறார்கள். வாக்கு வங்கிகளுக்காக அல்ல. அவர்களை இதுபோன்று நடத்துவது முறையல்ல'' எனக் குறிப்பிட்டார்.

ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில், சட்டப்பேரவையை நோக்கி பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். மேலும் தண்ணீரை பீய்ச்சியடித்து கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

Summary

Is it right for police to attack Devender Mahato who has been on a hunger strike for nine days

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.