மேற்கு வங்கத்தில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், பிர்பும் மாவட்டத்தில் உள்ள தாராபித் நகரில் திங்கள்கிழமை அதிகாலை ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
கோயில் நகரமான தாராபித்தில் உள்ள நான்கு மாடி ஹோட்டலின் தரைத்தளத்தில், பெரும்பாலான விருந்தினர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது, அதிகாலை 5 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.
காயமடைந்தவர்கள் ராம்பூர்ஹத் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தீ விபத்தில் 5 பேர் பலியானதாக மருத்துவமனை வட்டாரங்கள் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தன. இருப்பினும், பின்னர் பலியானவர்களின் எண்ணிக்கை 7 என்று போலீஸார் திருத்தித் தெரிவித்தனர்.
மின் கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாக விடுதி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். "திடீரென்று விடுதி முழுவதும் புகை சூழ்ந்துகொண்டது. எங்களால் சுவாசிக்க முடியவில்லை, வெளியேறுவதற்கான வழியைக் கண்டறிவதும் கடினமாக இருந்தது," என்று தீ விபத்திலிருந்து தப்பிய கொல்கத்தாவைச் சேர்ந்த பெண் கூறினார்.
பலியானவர்களில் சிலர், புகழ்பெற்ற காளி கோயிலில் வழிபாடு செய்வதற்காக அந்த நகருக்கு வந்திருந்த பக்தர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Summary
At least seven people were killed and several others critically injured in a fire at a hotel in West Bengal's Birbhum district early on Monday, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








