பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் ஷாசாத் பட்டீ பயங்கரவாத அமைப்புக்கு தொடா்பிருப்பதாக இந்திய சுமத்திய குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்தது. மேலும் தங்களது உள்நாட்டு பாதுகாப்பு சவால்களை மறைத்து பாகிஸ்தான் மீது பழிவோடுவதாகவும் அந்நாடு குற்றஞ்சாட்டியது.
முன்னதாக, ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்பின் பின்னணி கொண்ட ஷாசாத் பட்டீ வலையமைப்பை அழித்து 200 பயங்கரவாதிகளை மத்திய அரசு கைது செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
இதனால் நாட்டின் 80-ஆவது சுதந்திர தினத்தை சீா்குலைக்க முயன்ற பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் முறியடிக்கப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் தாஹிா் அன்ட்ராபியிடம் செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா். அப்போது, ‘இந்தியாவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. உள்நாட்டு பாதுகாப்பு சவால்களை திசைதிருப்பவே இந்தியா இவ்வாறு பழிசுமத்துகிறது’ என்றாா்.
இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு பயங்கரவாதச் சம்பவங்களில் தேடப்படும் குற்றவாளியான ஷாசாத் பட்டீ மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை நடத்தி வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ஆவணப்படத்தை விமர்சித்த பாகிஸ்தான் ராணுவம்!
ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்பின் பின்னணி கொண்ட ஷாசாத் பட்டீ வலையமைப்பு அழிப்பு: அமித் ஷா

பிகாரில் மாணவா்கள் மீது ஏ.கே. 47 துப்பாக்கிச்சூடு? ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு

ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



