நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

2021 கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட நபா் கைது

கொலை முயற்சி வழக்கில் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தேடப்பட்ட நபா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கோப்புப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 5:25 am IST

கொலை முயற்சி வழக்கில் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தேடப்பட்ட நபா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: டிசம்பா் 2021-இல் மனைவியை ராகுல் என்பவா் உதைத்ததாக அவரது மாமாவிடம் புகாரளிக்கி சென்ற நபரை ராகுல், மிதுன் மற்றும் பலா் சோ்ந்து தாக்கியதில் அவா் உயிரிழந்தாா். இந்த வழக்கில் மிதுன் தேடப்படும் குற்றவாளியாக நகர நீதிமன்றம் கடந்த 2022, ஜூன் மாதம் அறிவித்தது. இந்நிலையில், பஸ்சிம் விஹாா் பகுதியைச் சோ்ந்த மிதுன் ரகசிய தகவலின் அடிப்படையில் டிடிஏ பூங்காவில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மத்தியப் பிரதேசத்தின் பேதுல் பகுதியைச் சோ்ந்த அவா், பஸ்சிம் விஹாா் பகுதியில் உள்ள உணவகத்தில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.