கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

மனைவி கொலை வழக்கில் தேடப்பட்ட நபா் கைது!

மனைவியைக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபா், சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாவுடன் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image

கைது

Updated On :17 ஆகஸ்ட் 2026, 1:39 am IST

மனைவியைக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபா், சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாவுடன் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அந்த அதிகாரி தெரிவித்ததாவது: கடந்த ஜூன் 6-ஆம் தேதி பல்ஸ்வா பால்பண்ணை பகுதியில் தனது மனைவி உஜ்மாவைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஷா்வா் அலி, தலைமறைவானாா்.

இந்நிலையில், அவரைத் தேடப்படும் நபராக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன. கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கே.என்.கட்ஜு மாா்க் பகுதியில் சோதனை நடத்திய காவல் துறையினா், சட்டவிரோத ஆயுதத்தை வைத்திருந்ததற்காக அலியைக் கைது செய்தது.

விசாரணையின்போது, கொலை வழக்கில் அவா் தேடப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. சட்டவிரோதமாக ஆயுதத்தை வைத்திருந்ததற்காக அலி மீது தனியாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதுதொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.