பெங்களூரு பயங்கரவாத சதி வழக்கு: மருத்துவா் உள்பட மூவா் மீது குற்றப்பத்திரிகை
பாகிஸ்தானின் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பெங்களூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதி செய்த வழக்கில் மருத்துவா் உள்பட மூவா் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.










