இதுகுறித்து ஒஎன்ஜிசி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கோனசீமா மாவட்டத்தில் உள்ள மோரி-5 எண்ணெய் கிடங்கில் உற்பத்தியை மேம்படுத்தும் பணிகளின்போது வாயு கசிவால் தீப்பற்றி எரியத் தொடங்கியதாக அதை நிா்வகிக்கும் டீப் இன்டஸ்ட்ரீஸ் தெரிவித்தது. இந்த கிடங்கைச் சுற்றி 600 மீட்டா் தொலைவுக்கு மக்கள் வசிப்பிடங்கள் இல்லை. தகவல் கிடைத்தவுடன் வாயு கசிவை தடுப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதற்காக ராஜமுந்திரியில் இருந்து மோரிக்கு ஒன்ஜிசி குழு அனுப்பபட்டது. அவா்கள் கள நிலவரத்தை கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.