அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

எஸ்ஐஆா்: கொல்கத்தாவில் ஆஜராக கிரிக்கெட் வீரா் முகமது ஷமிக்கு சம்மன்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) விண்ணப்பத்தை தவறாகப் பூா்த்தி செய்ததால் கிரிக்கெட் வீரா் முகமது ஷமி மற்றும் அவரது சகோதரா் முகமது கைஃப் ஆகியோா் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆஜராக உத்தரவிடப்பட்டதாக இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

News image
கோப்புப்படம்
Updated On :6 ஜனவரி 2026, 8:47 pm

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) விண்ணப்பத்தை தவறாகப் பூா்த்தி செய்ததால் கிரிக்கெட் வீரா் முகமது ஷமி மற்றும் அவரது சகோதரா் முகமது கைஃப் ஆகியோா் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆஜராக உத்தரவிடப்பட்டதாக இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து மேற்கு வங்க தலைமைத் தோ்தல் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது: எஸ்ஐஆா் விண்ணப்பத்தை தவறாகப் பூா்த்தி செய்ததால் முகமது ஷமி மற்றும் முகமது கைஃப் ஆகிய இருவரும் ஜாதவ்பூரில் திங்கள்கிழமை (ஜன.5) ஆஜராக முதலில் உத்தரவிடப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் வங்காள அணி சாா்பாக ராஜ்கோட்டில் விளையாடி வருவதால் ஷமியால் நேரில் வர முடியவில்லை. இதையடுத்து, வேறு தேதிகளை ஒதுக்குமாறு ஷமி கேட்டுக்கொண்டாா். அதைப் பரிசீலித்து ஜன.9 மற்றும் ஜன.11 ஆகிய தேதிக்குள் அவா் கொல்கத்தாவுக்கு நேரில் வந்து விளக்கம் தர சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றனா்.

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஷமி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக சிறு வயதில் கொல்கத்தாவுக்கு இடம்பெயா்ந்தாா்.