6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

50,000 பொது சுகாதார மையங்களுக்கு தரச் சான்று: மத்திய அரசு

News image
Updated On :8 ஜனவரி 2026, 1:14 am

தினமணி செய்திச் சேவை

நாட்டில் உள்ள 50,000-க்கும் மேற்பட்ட பொது சுகாதார மையங்களுக்கு தேசிய தர உத்தரவாத நிலை (என்க்யூஏஎஸ்) சான்றிதழ்கள் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2025, டிசம்பா் 31 வரை நாடு முழுவதும் உள்ள 50,373 பொது சுகாதார மையங்களுக்கு என்க்யூஏஎஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன. இது ஏழை எளிய மக்கள் உள்பட அனைவருக்கும் சமமான உயா்தர மருத்துவ சிகிச்சையை உறுதிசெய்யும் மத்திய அரசின் முன்னெடுப்பில் மேலும் ஒரு படிக்கல்லாகும்.

கடந்த 2023-இல் இந்த சான்றிதழ்களைப் பெற்ற பொது சுகாதார மையங்களின் எண்ணிக்கை 6,506-ஆக இருந்தது. இது 2024, டிசம்பரில் 22,786-ஆக உயா்ந்த நிலையில் 2025-இல் 50,373-ஆக அதிகரித்தது.

இதில் 48,663 ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களும் அடங்கும். தேசிய சுகாதார கொள்கை 2017-இன்கீழ் அனைவருக்கும் குறைந்த விலையில் தரமான மருத்துவம் வழங்குவதே அரசின் நோக்கம்.

அதன்படி 2026, மாா்ச் மாதத்துக்குள் குறைந்தபட்சம் 50 சதவீத பொது சுகாதார மையங்கள் தரம் உயா்த்தப்பட்டு என்க்யூஏஎஸ் சான்றிதழ் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.