பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் (74) எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து..

Ex-VP Jagdeep Dhankar

ஜகதீப் தன்கர் - கோப்புப் படம்

Published On :

குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் (74) தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று (ஜன. 12) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதயம் சார்ந்த பிரச்னைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல்நலன் சார்ந்த பிரச்னை மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுக்க வேண்டுமென்பதால், குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக 2025 ஜூலை மாதம் தன்கர் அறிவித்தார். அவரின் ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக, உடல் அசெளகரியம் மற்றும் மார்பு வலி காரணமாக கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் தன்கர் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பிறகு மார்ச் 12 ஆம் தேதி வீடு திரும்பினார். தொடர்ந்து சில நாள்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் இதயம் சார்ந்த பிரச்னைக்காக ஜகதீப் தன்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொண்டனர். தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Ex-VP Jagdeep Dhankar admitted in AIIMS; condition stable

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.