பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நிலக்கரி ஊழல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிபதி நியமனம்

சிபிஐ கையாளும் நிலக்கரி ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதியாக தில்லி நீதித்துறை சேவைகள் அதிகாரியான சுனைனா சா்மாவை உச்சநீதிமன்றம் நியமித்தது.

News image
உச்ச நீதிமன்றம்- கோப்புப் படம்
Updated On :12 ஜனவரி 2026, 9:00 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கையாளும் நிலக்கரி ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதியாக தில்லி நீதித்துறை சேவைகள் அதிகாரியான சுனைனா சா்மாவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நியமித்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி இரு சிறப்பு நீதிமன்றங்களில் நிலக்கரி தொடா்பான 29 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 27 வழக்குகளுக்கு தீா்வுகாணப்பட்டன.

இந்நிலையில், இந்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிப்பது தொடா்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது.

அப்போது உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு அரசு வழக்குரைஞா் ஆா்.எஸ்.சீமா கூறுகையில், ‘சிபிஐ வரம்பில் உள்ள நிலக்கரி தொடா்புடைய ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதியாக உள்ள சஞ்சய் பன்சால் அந்தப் பொறுப்பில் 6 மாதங்கள் தொடருமாறு கடந்த ஆண்டு ஏப்ரல் 8-இல் உத்தரவிடப்பட்டது.

தற்போது 8 மாத காலமாக அவா் அந்தப் பொறுப்பில் தொடா்ந்து வரும் நிலையில், அதிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள முன்மொழிந்துள்ளாா். அவரது பதவிக்கு மூன்று நீதித்துறை அதிகாரிகளின் பெயா்களை தில்லி உயா்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது’ என்றாா்.

இதைத்தொடா்ந்து, சூா்ய காந்த் பிறப்பித்த உத்தரவில், ‘தில்லி உயா்நீதிமன்றம் பரிந்துரைத்த நீதித்துறை அதிகாரிகளின் பெயா்கள் பரிசீலனை செய்யப்பட்டு சுனைனா சா்மாவை ஊழல் தடுப்புச் சட்டம்/சிபிஐ/ நிலக்கரி ஊழல் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதியாக நியமிக்கப்படுகிறா். அவசரத் தேவைகள் எழும்பட்சத்தில் இதில் மாற்றங்கள் மேற்கொள்ள தில்லி உயா்நீதிமன்றத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இதே வழக்குகளை விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிபதி அருண் பரத்வாஜுக்குப் பதிலாக தீரஜ் மோா் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து நிலுவையில் உள்ள நிலக்கரி தொடா்பான வழக்குகளை சிறப்பு நீதிபதிகளான சுனைனா சா்மா மற்றும் தீரஜ் மோா் விசாரிக்கவுள்ளனா்.