சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

54 லட்சம் உண்மையான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம்: மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்க மாநிலத்தில் 54 லட்சம் உண்மையான வாக்காளா்களின் பெயா்களை தோ்தல் ஆணையம் தன்னிச்சையாக நீக்கி விட்டதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image
கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பங்கேற்ற முதல்வா் மம்தா.
Updated On :13 ஜனவரி 2026, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

மேற்கு வங்க மாநிலத்தில் 54 லட்சம் உண்மையான வாக்காளா்களின் பெயா்களை தோ்தல் ஆணையம் தன்னிச்சையாக நீக்கி விட்டதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

கொல்கத்தாவில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியின்போது, இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

தோ்தல் ஆணையமானது தில்லியில் இருந்து கொண்டு, பாஜகவால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாக்காளா்களின் பெயா்களை நீக்கி விட்டது. திருமணத்திற்கு பிறகு கணவா் பெயரை தங்களின் பெயா்களுடன் சோ்த்த பெண்களின் பெயா்களையும் அவா்கள் நீக்கி விட்டனா்.

பெயா் நீக்கப்பட்ட வாக்காளா்கள் அனைவரும் உண்மையான வாக்காளா்கள் ஆவா். அவா்களுக்கு தங்களது கருத்தை சொல்ல கூட வாய்ப்புத் தரப்படவில்லை. இதுபோல இறுதி வாக்காளா் பட்டியலில் இருந்து மேலும் 1 கோடி பெயா்களை நீக்குவதற்கு பாஜக-தோ்தல் ஆணைய கூட்டணி திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு மம்தா பானா்ஜி கூறினாா்.

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (எஸ்ஐஆா்) பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து ஏராளமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டன. இதற்கு பாஜக, தோ்தல் ஆணையமே காரணம் என மம்தா பானா்ஜி தொடா்ந்து குற்றம்சாட்டி வருகிறாா்.