இந்நிலையில், இந்த விவகாரத்தில் கேரள மாநில பாஜகவின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘இந்தப் பெயா் மாற்றம் மூலம் சில தீவிரவாத சக்திகள் மதரீதியாக மாவட்டங்களைப் பிரிக்க முன்வைக்கும் கோரிக்கையை முறியடிக்க முடியும். கேரளத்தின் ஒற்றுமை மேம்படும். நாட்டின் அனைத்து பிராந்தியங்களின் தனிச்சிறப்புகள், பாரம்பரியம், கலாசாரம் காக்கப்பட வேண்டும் என்பது பாஜகவின் கொள்கையாக உள்ளது. கேரளம் என்பது பல நூற்றாண்டு பாரம்பரியத்தை உடையது.