திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜன. 16) நடைபெறவுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஜனவரி 2026, 3:13 am IST

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜன. 16) நடைபெறவுள்ளது. நேற்று காலை முதல் மாலை வரை வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

மகாராஷ்டிரத்தில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு நேற்று (ஜன. 15) வாக்குப் பதிவு நடைபெற்றது. நாட்டிகே வணிகத் தலைநகராக கருதப்படும் மும்பை மாநகராட்சியில் மட்டும் 227 வார்டுகளில் 1,700 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இந்தத் தேர்தலில் பாஜக, சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே அணி) மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கொண்ட ஆளுங்கட்சியின் மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனை (உத்தவ் தாக்கரே அணி) மற்றும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கொண்ட எதிர்க்கட்சியின் மகா விகாஸ் அகாடி கூட்டணியும் போட்டியிடுகின்றன.

நேற்று காலை வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. ஒருசில இடங்ககளில் நேரம் நீட்டிக்கப்பட்டது. எனினும் மந்தமாகவே வாக்குப் பதிவு நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பேசிய மாநில தேர்தல் ஆணையர் தினேஷ் வாக்மார், உள்ளாட்சித் தேர்தலில் 46 - 50 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார். மும்பையில் 41.08% வாக்குகள் பதிவாகியிருந்தன. புணே வில் 36.95%, நாக்பூரில் 41.23%, சத்ரபதி சாம்பாஜிநகரில் 43.67%, நாசிக்கில் 39.63% வாக்குகள் பதிவாகின. குறைந்தபட்சமாக கொலாபா தொகுதியில் 15.73% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்குப் பதிவுக்கு பிறகான கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாஜக - சிவசேனை கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.

பல்வேறு நகராட்சிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டி இயந்திரங்கள் மும்பைக்கு இரவோடு இரவாக கொண்டுவரப்பட்டன. மும்பையில் 23 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. 2,299 அதிகாரிகள் வாக்குகளை எண்ணும் பணிகளில் ஈடுபடவுள்ளனர். காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Maharashtra Municipal Corporation Election Results vote counting today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.