

ஜனவரி 9 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு 687.19 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
ஜனவரி 9 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு 392 மில்லியன் டாலர் அதிகரித்து, 687.19 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கு முந்தைய அறிக்கை வாரத்தில், 9.809 பில்லியன் டாலர் குறைந்து, 686.80 பில்லியன் டாலராக இருந்தது.
உலகளாவிய பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில் ரூபாய் மதிப்பைப் பாதுகாக்க ரிசா்வ் வங்கி அந்நிய செலாவணியைப் பயன்படுத்துவதால், கையிருப்பு அவ்வப்போது ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.
டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.
இந்த வாரத்தில், இந்தியாவின் தங்க கையிருப்பு மதிப்பு 1.568 பில்லியன் டாலர் உயர்ந்து, 112.83 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டிஆர்) 39 மில்லியன் டாலர் குறைந்து, 18.739 பில்லியன் டாலராக உள்ளது.
சா்வதேச நாணய நிதியத்தில் (ஐஎம்எஃப்), இந்தியாவின் கையிருப்பு 13 மில்லியன் டாலர் குறைந்து, 4.758 பில்லியன் டாலராக உள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.