நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - ஆளும் பாஜக தொடர் முன்னிலை!

இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை மாநகரில் வெற்றி வாய்ப்பு பாஜகவுக்கே பிரகாசமாக இருப்பதை வாக்கு எண்ணிக்கை நிலவரம் பிரதிபலிக்கிறது.

News image

PTI

Updated On :16 ஜனவரி 2026, 4:08 pm IST

மும்பை : மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளும் பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இதனால், பல இடங்களில் அதிலும் குறிப்பாக, இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை மாநகரின் ‘ப்ரிஹான்மும்பை முனிசிபல் கார்ப்பரேசனில்’ வெற்றி வாய்ப்பு பாஜகவுக்கே பிரகாசமாக இருப்பதை வாக்கு எண்ணிக்கை நிலவரம் பிரதிபலிக்கிறது.

மகாராஷ்டிரத்தில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கும் தோ்தல் வியாழக்கிழமை (ஜன. 15) நடைபெற்றது. வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பேசிய மாநில தேர்தல் ஆணையர் தினேஷ் வாக்மார் 46 - 50 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருக்கக்கூடும் என்று கணித்திருப்பதாக தெரிவித்தார். இது கடந்த 2017இல் பதிவான வாக்குகளைவிட அதிகமாகும். இதனையடுத்து, இன்று (ஜன. 16) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து, மாலையில் தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.

Summary

Maharashtra civic election results: Mahayuti leads

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.