காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

ஐக்கிய அரபு அமீரக அதிபரின் 2 மணி நேர இந்தியப் பயணம்! விமான நிலையத்துக்கே சென்று வரவேற்ற பிரதமர் மோடி!

ஐக்கிய அரபு அமீரக அதிபர் இந்தியா வருகை - விமான நிலையத்தில் பிரதமர் மோடி வரவேற்பு...

Published On :19 ஜனவரி 2026, 6:58 pm IST

புது தில்லி : இந்தியாவுக்கு திங்கள்கிழமை(ஜன. 19) வருகை தந்த ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஸயத் அல் நயனை பிரதமர் நரேந்திர மோடி தில்லி விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றார்.

இது குறித்து தமது சமூக ஊடகத் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவொன்றில், ‘எமது சகோதரர், மதிப்புக்குரிய ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஸயத் அல் நயனை விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றதில் மகிழ்ச்சி. அன்னாரது வருகை இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான நட்புக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவத்தை விளக்குவதக அமைந்திருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில் இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஐக்கிய அரபு அமீரக அதிபர் இங்கு வெறும் 2 மணி நேரம் மட்டுமே இருப்பார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் பாலம் விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் ஒரே காரில் சென்ற பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவர்த்தையில் ஈடுபட உள்ளார்.

Summary

UAE President short visit to New Delhi - PM Narendra Modi Receives UAE President Sheikh Mohamed Bin Zayed At Palam Airport

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.