மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ம.பி.யில் 27 டன் மாட்டிறைச்சி பறிமுதல் செய்த விவகாரம்! மேயருக்கு எதிராக பஜ்ரங் தள் போராட்டம்!

போபாலில் 26 டன் மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் போராட்டம் நடைபெற்று வருவது குறித்து...

மாட்டிறைச்சி விவகாரத்தில் ம.பி. அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் (கோப்புப் படம்) - ANI

Published On :

மத்தியப் பிரதேசத்தில், 27 டன் மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், போபால் நகர் மேயரின் வீட்டை முற்றுகையிட்டு பஜ்ரங் தள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போபால் நகரத்தில், கடந்த 2025 டிசம்பர் 17 அன்று 26.5 டன் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற லாரியை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில், லாரியில் கொண்டுவரப்பட்டது எருமை மாட்டின் இறைச்சி எனக் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மதுராவில் உள்ள அரசு ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அது பசுவின் இறைச்சி என உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்குமாறும், அவர்களுக்கு சொந்தமான இடங்களை புல்டோசர் மூலம் இடித்து தகர்க்குமாறும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஹிந்து அமைப்புகள் மத்தியப் பிரதேசத்தின் பாஜக அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், மாநகராட்சியின் பாதுகாப்பின் கீழ் இறைச்சிக் கூடத்தில் பசுக்கள் கொல்லப்படுவதாகக் குற்றம்சாட்டிய பஜ்ரங் தள் அமைப்பினர் போபால் மேயர் மால்தி ராயின் வீட்டை இன்று (ஜன. 21) முற்றுகையிட்டனர்.

போபாலைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான மேயர் மால்தி ராயின் புகைப்படத்தில் கருப்பு சாயம் பூசியும், அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த விவகாரம் அங்கு பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

ollowing the seizure of 27 tons of beef, members of the Bajrang Dal staged a protest to the Bhopal mayor's house.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.