கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணிகளால் 126 போ் பலி! -திரிணமூல் காங். குற்றச்சாட்டு

இந்தியாவின் பிற மாநிலங்கள் எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டத்தில் தோல்வியைச் சந்தித்துவிட்டன - திரிணமூல் காங்.

News image
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணிக
Updated On :24 ஜனவரி 2026, 5:04 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் (எஸ்ஐஆா்) 126 போ் இறந்திருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. இது குறித்து அனைத்திந்திய திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலரும் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி பேசியிருப்பதாவது : “திட்டமிடப்படாத எஸ்ஐஆர் பணிகளால் இதுவரை 126 பேர் உயிரிழந்தனர்.

நாங்கள் எஸ்ஐஆருக்கு எதிராக போராடி வருகிறோம். அதன் ஒருபகுதியாக, நானும், 10 பேர் கொண்ட குழுவும் தில்லிக்குச் சென்று இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் உள்பட உயர் குழுவைச் சேர்ந்தோரைச் சந்தித்து முறையிட்டோம். அப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரும் இருந்தார். ஆனால், நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் உரிய பதில் அளிக்கவில்லை.

தில்லியிலும் ஹரியாணாவிலும் செய்தவற்றை அவர்கள் வங்கத்திலும் செய்வார்கள். இந்தியாவின் பிற மாநிலங்கள் எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டத்தில் தோல்வியைச் சந்தித்துவிட்டன. ஆனால், இவ்விவகாரத்தில் அவர்களை வீழ்த்துவதில் நாங்கள் மட்டுமே வெற்றி கண்டிருக்கிறோம்” என்றார்.

முன்னதாக, இவ்விவகாரம் குறித்து கடந்த வியாழக்கிழமை அம்மாநில முதல்வா் மம்தா பானா்ஜி குறிப்பிடுகையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் அச்சம் காரணமாக மேற்கு வங்கத்தில் 110 போ் உயிரிழந்ததாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

126 people have died so far due to the unplanned SIR - AITC

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.