கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஸ்ரீநகரில் கடும் பனிப்பொழிவால் 50 விமானங்கள் ரத்து! சுற்றுலாப் பயணிகள் அவதி!

கடும் பனிப்பொழிவால் ஸ்ரீநகரின் பன்னாட்டு விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து...

News image
ஸ்ரீநகரில் கடும் பனிப்பொழிவால் 50 விமானங்கள் ரத்து- ANI
Updated On :27 ஜனவரி 2026, 7:05 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு - காஷ்மீரில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால், ஸ்ரீநகர் பன்னாட்டு விமான நிலையத்தில் சுமார் 50 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில், குளிர்காலம் உச்சத்தை நெருங்கியுள்ளதால் தலைநகரமான ஸ்ரீநகரில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாத் துறையை மையமாகக் கொண்டுள்ள ஸ்ரீநகரில் பெரும்பாலான போக்குவரத்து வசதிகள் கடும் பாதிப்படைந்துள்ளன.

இந்த நிலையில், ஸ்ரீநகரில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று (ஜன. 27) 50 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மோசமான வானிலையின் காரணமாக அந்த விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 25 விமானங்களும் 25 விமானங்களின் வருகையும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால், குடியரசு நாள் விடுமுறையைக் கொண்டாடுவதற்கு ஜம்மு - காஷ்மீர் சென்ற நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.