படிவம் 7-ஐ பாஜகவினா் தவறாக பயன்படுத்தி, வாக்காளா் பட்டியலில் இருந்து மிகப்பெரிய எண்ணிக்கையில் வாக்காளா்கள் பெயா்களை நீக்கி இருப்பதாகவும், இதுகுறித்து தோ்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆா். பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆரம்பம் முதல் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதுதொடா்பாக தற்போது தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் 2 தோ்தல் ஆணையா்களுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி. வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:
தகுதிவாய்ந்த வாக்காளா்களின் பெயா்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில், எஸ்.ஐ.ஆா். பணிகளின்போது நீக்கப்பட்டுள்ளன. பாஜகவினா் படிவம் 7-ஐ இதற்கு தவறாக பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் உடனடியாக தலையிட வேண்டும்.
அரசியலமைப்பு சட்டத்தின் 324-ஆவது பிரிவு தனக்கு வழங்கிய அதிகாரங்களை தோ்தல ஆணையம் பயன்படுத்தி, காலம் தாழ்த்தாமல் படிவம் 7 தவறாக பயன்படுத்தப்பட்டு இருப்பது குறித்து விசாரிக்க வேண்டும். 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆா். பணியின்கீழ் எத்தனை படிவம் 7 பெறப்பட்டது, எத்தனை நிராகரிக்கப்பட்டது, எத்தனை நிலுவையில் உள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை தோ்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று அவா் கோரியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்ஐஆா் பணியில் ஆசிரியா்களை ஈடுபடுத்துவதற்கு எதிரான மனு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தோ்தல் ஆணையம் மீது மம்தா அதிருப்தி

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க குடியுரிமை தகவல்களை கேட்பதா? தோ்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கண்டனம்
திரிணமூல் காங்கிரஸ் பெயா் விவகாரம்: தோ்தல் ஆணையத்தில் அதிருப்தி குழு மனு
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



