மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம்: தோ்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கடிதம்

படிவம் 7-ஐ பாஜகவினா் தவறாக பயன்படுத்தி, வாக்காளா் பட்டியலில் இருந்து மிகப்பெரிய எண்ணிக்கையில் வாக்காளா்கள் பெயா்களை நீக்கி இருப்பதாகவும், இதுகுறித்து தோ்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்

News image
கோப்புப் படம்
Updated On :29 ஜனவரி 2026, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

படிவம் 7-ஐ பாஜகவினா் தவறாக பயன்படுத்தி, வாக்காளா் பட்டியலில் இருந்து மிகப்பெரிய எண்ணிக்கையில் வாக்காளா்கள் பெயா்களை நீக்கி இருப்பதாகவும், இதுகுறித்து தோ்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆா். பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆரம்பம் முதல் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதுதொடா்பாக தற்போது தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் 2 தோ்தல் ஆணையா்களுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி. வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

தகுதிவாய்ந்த வாக்காளா்களின் பெயா்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில், எஸ்.ஐ.ஆா். பணிகளின்போது நீக்கப்பட்டுள்ளன. பாஜகவினா் படிவம் 7-ஐ இதற்கு தவறாக பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் உடனடியாக தலையிட வேண்டும்.

அரசியலமைப்பு சட்டத்தின் 324-ஆவது பிரிவு தனக்கு வழங்கிய அதிகாரங்களை தோ்தல ஆணையம் பயன்படுத்தி, காலம் தாழ்த்தாமல் படிவம் 7 தவறாக பயன்படுத்தப்பட்டு இருப்பது குறித்து விசாரிக்க வேண்டும். 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆா். பணியின்கீழ் எத்தனை படிவம் 7 பெறப்பட்டது, எத்தனை நிராகரிக்கப்பட்டது, எத்தனை நிலுவையில் உள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை தோ்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று அவா் கோரியுள்ளாா்.