எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம்: தோ்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கடிதம்

படிவம் 7-ஐ பாஜகவினா் தவறாக பயன்படுத்தி, வாக்காளா் பட்டியலில் இருந்து மிகப்பெரிய எண்ணிக்கையில் வாக்காளா்கள் பெயா்களை நீக்கி இருப்பதாகவும், இதுகுறித்து தோ்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்

News image

கோப்புப் படம்

Updated On :30 ஜனவரி 2026, 12:39 am IST

படிவம் 7-ஐ பாஜகவினா் தவறாக பயன்படுத்தி, வாக்காளா் பட்டியலில் இருந்து மிகப்பெரிய எண்ணிக்கையில் வாக்காளா்கள் பெயா்களை நீக்கி இருப்பதாகவும், இதுகுறித்து தோ்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆா். பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆரம்பம் முதல் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதுதொடா்பாக தற்போது தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் 2 தோ்தல் ஆணையா்களுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி. வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

தகுதிவாய்ந்த வாக்காளா்களின் பெயா்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில், எஸ்.ஐ.ஆா். பணிகளின்போது நீக்கப்பட்டுள்ளன. பாஜகவினா் படிவம் 7-ஐ இதற்கு தவறாக பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் உடனடியாக தலையிட வேண்டும்.

அரசியலமைப்பு சட்டத்தின் 324-ஆவது பிரிவு தனக்கு வழங்கிய அதிகாரங்களை தோ்தல ஆணையம் பயன்படுத்தி, காலம் தாழ்த்தாமல் படிவம் 7 தவறாக பயன்படுத்தப்பட்டு இருப்பது குறித்து விசாரிக்க வேண்டும். 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆா். பணியின்கீழ் எத்தனை படிவம் 7 பெறப்பட்டது, எத்தனை நிராகரிக்கப்பட்டது, எத்தனை நிலுவையில் உள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை தோ்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று அவா் கோரியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.