FOLLOW US

ON GOOGLE DISCOVER

ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ஜந்தர் மந்தருக்கு வரும் பீட்சா, பர்கர்! நாடு முழுவதுமிருந்து நூற்றுக்கணக்கானோரின் மனிதாபிமானம்

நாடு முழுவதுமிருந்து நூற்றுக்கணக்கானோரின் மனிதாபிமானம் காரணமாக ஜந்தர் மந்தருக்கு வரும் பீட்சா, பர்கர் பற்றி

News image

Jantar Mantar protest

Updated On :22 ஜூலை 2026, 3:21 pm IST

நீட் தேர்வுக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்களுக்காக, ஜந்தர் மந்தருக்கு அடையாளம் தெரியாதவர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான உணவு ஆர்டர்கள் வந்து கொண்டிருப்பது இன்னமும் நாட்டில் மனிதாபிமானம் மிச்சமிருப்பதையே காட்டுகிறது.

புது தில்லியில், ஜந்தர் மந்தரில் ஏராளமான மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அங்கு பெயர் குறிப்பிடாமல் ஏராளமான பீட்சா, பர்கர்கள் உணவு டெலிவரி செயலிகள் மூலம் கடந்த இரண்டு நாள்களாக வந்து கொண்டேயிருக்கின்றன.

நேரடியாகப் போராட்டத்துக்கு வந்து பங்கேற்க முடியாத இளைஞர்கள் பலரும், தங்களால் முடிந்ததை செய்வோம் என்று எண்ணி, இவ்வாறு ஜந்தர் மந்தர் என்று பெயரிட்டு, உணவுகளை ஆர்டர் செய்து அனுப்பி வருவதும் தெரிய வந்துள்ளது.

இந்த உணவு ஆர்டர்கள் அனைத்தும் தில்லியில் மட்டும் இருப்பவர்கள் மூலமாக அல்ல, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களால் ஆர்டர் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஜந்தர் மந்தருக்கு அருகே உள்ள உணவகங்களில் ஏராளமான ஆர்டர்கள் வரப்பெறுகின்றன. ஒரு உணவு டெலிவரி செய்யும் நபர் மட்டும் கிட்டத்தட்ட 10 உணவுகளை டெலிவரி செய்திருக்கிறாராம் ஜந்தர் மந்தரில். கிட்டத்தட்ட 500 ஆர்டர்களை இதுவரை ஜந்தர் மந்தரில் கொண்டு சென்று கொடுத்திருக்கிறோம். பீட்சா, பர்கர், ஏராளமான சமோசா, சாப்பாடு, பிரியாணி என பல விதமான உணவுகள் ஆர்டர் கொடுக்கப்படுகிறதாம்.

இது தொடர்பான விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கும் நிலையில், ஒரு விடியோவில், போராடி வரும் இளைஞர்களிடம் உணவைக் கொண்டு வந்த விநியோகிப்பாளர் ஒருவர் சொல்கிறார், இந்த உணவு மும்பையிலிருந்து ஆர்டர்கொடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லும் விடியோ வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.