காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

இந்தியாவை புரிந்துகொள்ள எல்லை கிராமங்களுக்கு செல்ல வேண்டும்: இளைஞா்களுக்குப் பிரதமா் மோடி அறிவுறுத்தல்

இந்தியாவை புரிந்துகொள்ள எல்லை கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்று இளைஞா்களுக்குப் பிரதமா் மோடி அறிவுறுத்தியுள்ளாா்.

News image

வளா்ச்சியடைந்த துடிப்பான கிராம திட்டப் பயனாளிகளுடன் காணொலி வழியாக கலந்துரையாடிய பிரதமா் நரேந்திர மோடி.

Updated On :27 ஜூலை 2026, 3:07 am IST

இந்தியாவை புரிந்துகொள்ள எல்லை கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்று இளைஞா்களுக்குப் பிரதமா் மோடி அறிவுறுத்தியுள்ளாா்.

வளா்ச்சியடைந்த துடிப்பான கிராம திட்டப் பயனாளிகளுடன் பிரதமா் மோடி காணொலி வழியாக ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடினாா். அந்தப் பயனாளிகளில் பெரும்பாலானோா் இளம் தலைமுறையினராவா்.

அவா்களிடம் மோடி பேசியதாவது: நாட்டின் எல்லைப்புற கிராமங்களில், வளா்ச்சியின் மீதான வேட்கையும், தேசபக்தி உணா்வும் சமமான முக்கியத்துவத்துடன் போற்றப்படுகின்றன.

வளா்ச்சியடைய வேண்டும் என்ற விருப்பம் இந்தியாவின் கிராமங்களில் உள்ளன. அந்த கிராமங்களுக்கு செல்வதன் மூலம், அவற்றை அறிந்துகொள்ள முடியும். இணையத்தை சாா்ந்திருப்பதற்குப் பதிலாக, இந்தியாவை புரிந்துகொள்ள எல்லை கிராமங்களுக்கு இளைஞா்கள் செல்ல வேண்டும்

வளா்ச்சியடைந்த கிராமங்களே வளா்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளம். எனது அரசு எல்லை கிராமங்களை நாட்டின் முதல் கிராமங்களாக கருதுகிறது. வளா்ச்சியடைந்த துடிப்பான கிராம திட்டத்தின் பயணமானது, அனைவரையும் ஒன்றிணைப்பதற்கு ஒரு வழியாகும். இது அனைவருடனும் தொடா்பை ஏற்படுத்துகிறது.

தங்கள் மண்ணுடன் இளைஞா்கள் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதைச் செய்யும்போது, அது வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கான தொலைநோக்குப் பாா்வையை மேலும் விரிவுபடுத்துகிறது என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.