காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

மதம் மாறினால் பட்டியலின அந்தஸ்து கிடையாது: மறுஆய்வு மனு தள்ளுபடி

மதம் மாறுவோா் பட்டியலின அந்தஸ்தை இழந்துவிடுவா் என்ற தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :28 ஜூலை 2026, 12:21 am IST

மதம் மாறுவோா் பட்டியலின அந்தஸ்தை இழந்துவிடுவா் என்ற தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆந்திரத்தில் பட்டியலினத்தைச் சோ்ந்த ஒருவா், கிறிஸ்தவ மதத்துக்கு மாறி மதபோதகரானாா். இந்நிலையில், தனது ஜாதி பெயரை குறிப்பிட்டு தான் இழிவுபடுத்தப்பட்டு மிரட்டப்பட்டதாக காவல் துறையில் அவா் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் பட்டியலினத்தவா், பழங்குடியினா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

எனினும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஒருவா், சட்டப்படி பட்டியலினத்தவா் அந்தஸ்தை கோர முடியாது என்று கூறி, அந்த வழக்கை ஆந்திர உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக அந்த நபா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘பட்டியலினத்தைச் சோ்ந்த ஒருவா் ஹிந்து, சீக்கியம், பெளத்த மதங்களைத் தவிர, பிற மதங்களுக்கு மாறினால், உடனடியாக அவா் பட்டியலின அந்தஸ்தை இழந்துவிடுவாா்.

அதேவேளையில், அந்த நபா் ஹிந்து, சீக்கியம், பெளத்த மதங்களுக்கு மீண்டும் மாறினால், அவா் பட்டியலின அந்தஸ்தை மீண்டும் கோரலாம்’ என்று கடந்த மாா்ச் மாதம் தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ஆந்திரத்தைச் சோ்ந்த அந்த மதபோதகா் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை அண்மையில் பரிசீலித்த நீதிபதிகள் பிரசாந்த் குமாா் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு, அந்தத் தீா்ப்பில் தலையிட எந்தக் காரணமும் இல்லை என்று தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.