மக்களவையில் பேசத் தடுத்ததை இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் பேசுவேன்: ராகுல் காந்திவந்தே மாதரத்தை அவமதிப்பது குற்றம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்!கத்திப்பாராவில் 101 அடி உயர மெட்ரோ பாலத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!மக்களவையில் தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் விஜய் ஆய்வு! துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அமித் ஷா எங்கே? பயந்துவிட்டாரா? மக்களவையில் ராகுல் கேள்வி! மாணவர்கள் போராட்டத்தை பாஜகவினர் குழந்தைகளே ஆதரிப்பார்கள்! ராகுல் காந்தி பேச்சு!மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி சாதாரணமான ஒன்றுதான்! மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பதில்!பாமக தலைவராக மீண்டும் அன்புமணி தேர்வு! நீட் வினாத்தாள் கசிவு! விரைவு நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய சிபிஐ! சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
/

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டபோதிலும் எங்களிடம் தண்ணீர் இல்லை: கர்நாடக அமைச்சர்

கர்நாடகத்திலேயே போதுமான தண்ணீர் இல்லை என்று அம்மாநில அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளது பற்றி...

News image

கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி... - கோப்புப் படம்

Updated On :29 ஜூலை 2026, 3:58 pm IST

கர்நாடகத்திலேயே போதுமான தண்ணீர் இல்லை என்று அம்மாநில அமைச்சர் ராமலிங்க ரெட்டி இன்று (ஜூலை 29) தெரிவித்துள்ளார்.

காவிரி நீர் பிரச்னை குறித்து அவர் பேசியதாவது:

இந்தப் பிரச்னை தொடர்பாக 15 நாள்களுக்கு ஒருமுறை கூட்டம் நடைபெறுகிறது. 15 நாள்களுக்கு ஒருமுறை 3,500 கன அடி தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழங்காற்றுக் குழு நேற்று (ஜூலை 28) உத்தரவிட்டது.

கர்நாடகத்திலேயே போதுமான தண்ணீர் இல்லை. ஹரங்கி, கபினி, கேஆர்எஸ் மற்றும் ஹேமாவதி ஆகிய நான்கு அணைகளிலும் சேர்த்து, நம்மிடம் வெறும் 46 டி.எம்.சி (1,000 மில்லியன் கன அடி) நீர் மட்டுமே உள்ளது. ஒவ்வொரு மாதமும், 10 மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக 3.5 டி.எம்.சி தண்ணீர் நமக்கு தேவைப்படுகிறது.

அதனால்தான் நாங்கள் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் மேல்முறையீடு செய்யப் போகிறோம். அதற்கான விண்ணப்பத்தைத் தாக்கல் எங்கள் கூடுதல் தலைமைச் செயலாளர் தாக்கல் செய்வார். அனைத்து விவரங்களுக்கும், நீங்கள் எங்கள் முதல்வர் டி.கே. சிவகுமாரை தொடர்பு கொள்ளலாம். இதற்கான காரணங்கள் என்ன, என்னென்ன விஷயங்கள் முடிவு செய்யப்பட்டு விவாதிக்கப்பட உள்ளன என்பதை நாளை அவர் உங்களுக்குத் தெரிவிப்பார் என்று அமைச்சர் ராமலிங்க ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கர்நாடக முதல்வர் டி.கே சிவகுமார், காவிரி நதிநீர் பிரச்னைக்கு மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது மட்டுமே ஒரே தீர்வு எனக் கூறி, அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதும் அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தகது.

Summary

Karnataka Minister Ramalinga Reddy has stated that there is not enough water even within Karnataka itself.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.