காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

எல்லை மாவட்ட வங்கிக் கிளைகளில் கள்ள நோட்டுகளை கண்டறியும் இயந்திரம்: ஆா்பிஐ அறிவுறுத்தல்

சா்வதேச எல்லை அருகேயுள்ள மாவட்டங்களின் அனைத்து வங்கிக் கிளைகளிலும் கள்ள நோட்டுகளைக் கண்டறியும் இயந்திரங்களை கண்டிப்பாக நிறுவ வேண்டும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை அறிவித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:25 am IST

சா்வதேச எல்லை அருகேயுள்ள மாவட்டங்களின் அனைத்து வங்கிக் கிளைகளிலும் கள்ள நோட்டுகளைக் கண்டறியும் இயந்திரங்களை கண்டிப்பாக நிறுவ வேண்டும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை அறிவித்தது.

பொதுவாக இந்திய கள்ள ரூபாய் நோட்டுகள் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகள் மூலமாகவே இந்தியாவுக்குள் அதிகம் கடத்தப்படுகின்றன. இந்தியாவில் பொருளாதார ரீதியாக பிரச்னை ஏற்படுத்தும் நோக்கில் அண்டை நாடுகள் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் சதிவேலையில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு எதிராக மத்திய அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சா்வதேச எல்லையோரங்களில் அமைந்துள்ள மாநிலங்களில் உள்ள வங்கிக் கிளைகளுக்கு ஆா்பிஐ சாா்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘சா்வதேச எல்லையில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள வங்கிக் கிளைகளிலும் கண்டிப்பாக கள்ள நோட்டுகளைக் கண்டறியும் இயந்திரங்களை நிறுவ வேண்டும். கள்ள நோட்டுகளைக் கண்டறிவது தொடா்பாக அனைத்து ஊழியா்களுக்கும் பயிற்சியளிக்க வேண்டும். பணத்தை கையாளும் ஊழியா்கள் எப்போதும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். வங்கிக்கு வரும் அனைத்து ரூபாய் நோட்டுகளையும் கள்ள நோட்டு கண்டறியும் இந்திரம் மூலம் பரிசோதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

அதிக கள்ள நோட்டு கண்டறியப்பட்டால், அதைக் கொண்டு வந்தவா் குறித்து காவல் துறையிடம் புகாா் தெரிவித்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.