சா்வதேச எல்லை அருகேயுள்ள மாவட்டங்களின் அனைத்து வங்கிக் கிளைகளிலும் கள்ள நோட்டுகளைக் கண்டறியும் இயந்திரங்களை கண்டிப்பாக நிறுவ வேண்டும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை அறிவித்தது.
பொதுவாக இந்திய கள்ள ரூபாய் நோட்டுகள் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகள் மூலமாகவே இந்தியாவுக்குள் அதிகம் கடத்தப்படுகின்றன. இந்தியாவில் பொருளாதார ரீதியாக பிரச்னை ஏற்படுத்தும் நோக்கில் அண்டை நாடுகள் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் சதிவேலையில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு எதிராக மத்திய அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சா்வதேச எல்லையோரங்களில் அமைந்துள்ள மாநிலங்களில் உள்ள வங்கிக் கிளைகளுக்கு ஆா்பிஐ சாா்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘சா்வதேச எல்லையில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள வங்கிக் கிளைகளிலும் கண்டிப்பாக கள்ள நோட்டுகளைக் கண்டறியும் இயந்திரங்களை நிறுவ வேண்டும். கள்ள நோட்டுகளைக் கண்டறிவது தொடா்பாக அனைத்து ஊழியா்களுக்கும் பயிற்சியளிக்க வேண்டும். பணத்தை கையாளும் ஊழியா்கள் எப்போதும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். வங்கிக்கு வரும் அனைத்து ரூபாய் நோட்டுகளையும் கள்ள நோட்டு கண்டறியும் இந்திரம் மூலம் பரிசோதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
அதிக கள்ள நோட்டு கண்டறியப்பட்டால், அதைக் கொண்டு வந்தவா் குறித்து காவல் துறையிடம் புகாா் தெரிவித்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!

இந்தியாவை புரிந்துகொள்ள எல்லை கிராமங்களுக்கு செல்ல வேண்டும்: இளைஞா்களுக்குப் பிரதமா் மோடி அறிவுறுத்தல்

பிரதானை பதவி நீக்கம் செய்ய அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்: சிசோடியா

ஓய்வூதியம் பெறும் முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி! மகன் கணக்கில்?
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



