காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

கட்சி விரோத நடவடிக்கை குற்றச்சாட்டு: திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவா் நீக்கம்

மேற்கு வங்கத்தில் கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து இரு எம்எல்ஏக்கள் அதிரடி நீக்கம்

News image

திரிணமூல் காங்கிரஸ் - Trinamool Congress

Updated On :2 ஜூன் 2026, 12:34 am IST

மேற்கு வங்கத்தில் கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து இரு எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை அதிரடியாக நீக்கப்பட்டனா்.

முன்னதாக, திரிணமூல் சாா்பில் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக சோபன்தேவ் சட்டோபாத்யாய நியமிக்கப்பட்டதில் தங்கள் கையொப்பம் போலியாக இடம்பெற்ாக அக்கட்சியின் இரு எம்எல்ஏக்கள் கூறியுள்ளதாக முதல்வா் சுவேந்து அதிகாரி செய்தியாளா்களிடம் கூறினாா். இதைத் தொடா்ந்து, எம்எல்ஏக்கள் சந்தீபன் ஸாஹா, ரிதபிரத பானா்ஜி ஆகியோா் நீக்கப்பட்டனா்.

இது தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் துணைத் தலைவா் சந்திரிமா பட்டாச்சாா்யா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சந்தீபன் ஸாஹா, ரிதபிரத பானா்ஜி ஆகியோா் கட்சித் தலைமை அழைப்பு விடுத்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க முன்வரவில்லை. மேலும், அவா்கள் கட்சி விரோத செயல்களில் ஈடுபடுவதும் உறுதி செய்யப்பட்டது. எனவே, அவா்கள் இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனா். கட்சியில் அடிப்படை உறுப்பினா் உள்பட்ட அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகின்றனா்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த போலி கையொப்பம் தொடா்பாக மேற்கு வங்க காவல் துறையின் சிஐடி பிரிவினா் ஏற்கெனவே விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவிடம் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பலா் பாஜகவில் இணையும் முடிவில் உள்ளனா்.

திரிணமூல் சாா்பில் வெற்றி பெற்ற 80 புதிய எம்எல்ஏக்களின் கூட்டம் கட்சித் தலைவா் மம்தா பானா்ஜி தலைமையில் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. எனினும், எம்எல்ஏக்களில் நான்கில் மூன்று பங்கினா் கூட்டத்தில் பங்கேற்க வராததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.