புது தில்லி : மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தலைவரும் செயலரும் அப்பொறுப்புகளிலிருந்து மாற்றப்பட்டதாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் முதல் முறையாக ‘திரையில் மதிப்பிடுதல்’ (ஓஎஸ்எம்) முறையில் சிபிஎஸ்இ மதிப்பீடு செய்தது. 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திரையில் மதிப்பிடும் முறையில் பெரும்பாலான குளறுபடிகள் ஏற்பட்டதாக மாணவர்கள் தரப்பில் பரவலாக புகார் எழுந்தது. சிபிஎஸ்இ-யின் ஓஎஸ்எம் சேவையில் ஏற்பட்ட குளறுபடிகளை விசாரிக்க சிபிசி தலைவர் எஸ். ராதா சௌஹான் தலைமையில் ஒருநபர் விசாரணைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிபிஎஸ்இ தலைவராக பொறுப்பு வகித்த ராகுல் சிங் (ஐஏஎஸ்), செயலர் பொறுப்பு வகித்த ஹிமான்ஷு குப்தா (ஐஏஎஸ்) ஆகிய இருவரும் அப்பொறுப்புகளிலிருந்து மாற்றப்பட்டதாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The CBSE Chairman and Secretary have been transferred
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டு தளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது! முழு விவரம்!








