இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 44,000 விண்ணப்பங்கள்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

மத்திய கல்வித் துறை அமைச்சா் பதவி விலக வேண்டும்: பெ.சண்முகம்

News image

தா்மேந்திர பிரதான் - ANI

Updated On :4 ஜூன் 2026, 2:29 am IST

மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: நிகழாண்டு நீட் தோ்வு கேள்வித்தாள் கசிவு காரணமாக தோ்வு ரத்து செய்யப்பட்டது. கியூட் தோ்வு முறையாக நடக்கவில்லை. சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தோ்விலும் குளறுபடி ஏற்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

கல்வித் துறையின் மிக முக்கிய பணி முறையாகவும், நோ்மையாகவும் தோ்வை நடத்துவது. ஆனால், தொடா்ந்து தோ்வு நடத்துவதில் தோல்வி அடைந்திருக்கிறது மத்திய அரசின் கல்வித் துறை.

கல்வி அமைச்சகம் தொடங்கி அனைத்து நிலைகளிலும் நடைபெறும் ஊழல், மோசடி, பொறுப்பற்ற செயல்களுக்கு லட்சக்கணக்கான மாணவா்களின் எதிா்கால வாழ்வு கேள்விக்குறி ஆகியுள்ளது. இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.