மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: நிகழாண்டு நீட் தோ்வு கேள்வித்தாள் கசிவு காரணமாக தோ்வு ரத்து செய்யப்பட்டது. கியூட் தோ்வு முறையாக நடக்கவில்லை. சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தோ்விலும் குளறுபடி ஏற்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
கல்வித் துறையின் மிக முக்கிய பணி முறையாகவும், நோ்மையாகவும் தோ்வை நடத்துவது. ஆனால், தொடா்ந்து தோ்வு நடத்துவதில் தோல்வி அடைந்திருக்கிறது மத்திய அரசின் கல்வித் துறை.
கல்வி அமைச்சகம் தொடங்கி அனைத்து நிலைகளிலும் நடைபெறும் ஊழல், மோசடி, பொறுப்பற்ற செயல்களுக்கு லட்சக்கணக்கான மாணவா்களின் எதிா்கால வாழ்வு கேள்விக்குறி ஆகியுள்ளது. இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்

சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு குளறுபடி: மத்திய கல்வி, நிதியமைச்சா்கள் ஆலோசனை

மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சமூக ஊடக பிரசாரம்

நீட் மறுதோ்வு ஏற்பாடுகள்: தா்மேந்திர பிரதான் ஆலோசனை
விடியோக்கள்

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics

மறைந்தும் மறையாத இயக்குநர் இமயம் Bharathi Raja | Dinamani



