எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

ஈரானைவிட்டு உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!

ஈரானைவிட்டு உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு அறிவுறுத்தியது பற்றி...

News image

ஈரானைவிட்டு வெளியேற இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல் - கோப்புப்படம்

Updated On :8 ஜூன் 2026, 1:00 pm IST

ஈரானில் இருக்கும் இந்தியர்கள் கிடைக்கக் கூடிய போக்குவரத்து மூலம் அந்நாட்டைவிட்டு உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய போர், பேச்சுவார்த்தைகளில் தீர்வு கிடைக்காததால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”ஈரானில் நிலவும் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு வெளியிடப்பட்ட அறிவுறுத்தலை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

தற்போது ஈரானில் உள்ள இந்திய குடிமக்கள், கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகள் மூலம் அந்நாட்டைவிட்டு உடனடியாக வெளியேறுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை என்றால், அந்நாட்டை கடுமையாக தாக்கி அழித்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Story image

Summary

Embassy advises Indians to leave Iran immediately!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.