ஈரானில் இருக்கும் இந்தியர்கள் கிடைக்கக் கூடிய போக்குவரத்து மூலம் அந்நாட்டைவிட்டு உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய போர், பேச்சுவார்த்தைகளில் தீர்வு கிடைக்காததால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”ஈரானில் நிலவும் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு வெளியிடப்பட்ட அறிவுறுத்தலை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
தற்போது ஈரானில் உள்ள இந்திய குடிமக்கள், கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகள் மூலம் அந்நாட்டைவிட்டு உடனடியாக வெளியேறுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை என்றால், அந்நாட்டை கடுமையாக தாக்கி அழித்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary
Embassy advises Indians to leave Iran immediately!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









