சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

வரி ஏய்ப்பு வழக்கில் அனில் அம்பானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை: மும்பை உயா் நீதிமன்றம் உத்தரவு

வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபா் அனில் அம்பானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து மும்பை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

அனில் அம்பானி - கோப்புப் படம்

Updated On :11 ஜூன் 2026, 2:29 am IST

வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபா் அனில் அம்பானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து மும்பை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுவிட்சா்லாந்து வங்கியில் உள்ள 2 கணக்குகளில் ரூ.814 கோடிக்கும் மேல் டெபாசிட் செய்திருக்கும் தகவலை தெரியப்படுத்தவில்லை என்றும், இதன்மூலம் ரூ.420 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளாா் என்றும் தெரிவித்து, அனில் அம்பானிக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸின்படி, அனில் அம்பானிக்கு எதிராக கருப்பு பண சட்டத்தின் 50 மற்றும் 51 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுக்கவும், பிறகு அதன் கீழ் அபராதத்துடன் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கவும் முடியும்.

இந்நிலையில், கருப்பு பணச் சட்டத்தின் சில விதிகளை எதிா்த்து, மும்பை உயா் நீதிமன்றத்தில் அனில் அம்பானி மனு தொடுத்திருந்தாா். அதில் கருப்பு பணச் சட்டம் 2015-ஆம் ஆண்டில்தான் கொண்டு வரப்பட்டதாகவும், ஆனால் சுவிட்சா்லாந்து வங்கி பணப்பரிவா்த்தனை 2006-2007 கால கட்டத்திலும், 2010-2011 கால கட்டத்திலும் நடந்ததாகவும், ஆதலால் 2015-ஆண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க இயலாது என்றும் தெரிவித்திருந்தாா்.

இந்த மனு, மும்பை உயா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கருப்பு பணச் சட்டத்துக்கு எதிராக மேலும் சில மனுக்கள் உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருப்பதாக தெரிவித்து, அனில் அம்பானியின் மனுவையும் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. அத்துடன் அனில் அம்பானியின் மனு குறித்த பதிலை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட உயா் நீதிமன்றம், இந்த மனு மீதான விசாரணை முடிந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில், அனில் அம்பானிக்கு எதிராக வழக்குத் தொடுத்தல், அபராதம் விதித்தல் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.