மும்பையில் உள்ளூர் ரயிலில் இருக்கை தொடர்பான தகராறில் பயணி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையத்திலிருந்து கோபோலிக்கு வியாழக்கிழமை உள்ளூர் ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது இருக்கை தொடர்பான தகராறில் பயணி ஒருவரை சக பயணிகள் கத்தியால் குத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர். கத்திக்குத்து சம்பவத்தில் பலத்த காயமடைந்த பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர், மும்பையின் மஸ்ஜித் பந்தர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் குமார் பதக் (26) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ரயில் வங்கணி ரயில் நிலையத்தைக் கடந்தபோது, சரக்கு வைக்கும் பெட்டியில் அமர்வது தொடர்பாக பதக்கிற்கும் இளைஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
இந்த வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறி கத்திக் குத்தில் முடிவடைந்துள்ளது.
Summary
Two persons have been arrested for allegedly stabbing a man on a running Mumbai local train following a dispute over a seat, police said.
தொடர்புடையது

நடப்பு ஐபிஎல் சீசன் பாதியிலேயே மும்பை அணியிலிருந்து விலக முடிவெடுத்த ஹார்திக் பாண்டியா?

மும்பை அணிக்கு 206 ரன்கள் இலக்கு!

காணாமல் போன மருத்துவ மாணவர், மும்பை வீதிகளில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தபோது மீட்பு!

மழையினால் நிறுத்தப்பட்டுள்ள ஐபிஎல் போட்டி: 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் மும்பை!
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



