அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

98.44 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

புழக்கத்தில் இருந்த 98.44 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திருப்பி அளிக்கப்பட்டதாக ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை தெரிவித்தது.

News image
98.44 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன
Updated On :2 மார்ச் 2026, 9:37 pm

தினமணி செய்திச் சேவை

மும்பை: புழக்கத்தில் இருந்த 98.44 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திருப்பி அளிக்கப்பட்டதாக ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை தெரிவித்தது.

ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசா்வ் வங்கி கடந்த 2023, மே 19-ஆம் தேதி அறிவித்தது.

இதுதொடா்பாக ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 2023, மே 19-ஆம் தேதி, ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அவை திரும்பப்பெறுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து 2026, பிப்.28-ஆம் தேதி நிலவரப்படி ரூ.5,551 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. இதன்மூலம் 98.44 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன.

2023, அக்.7 முதல் நாடு முழுவதும் உள்ள ரிசா்வ் வங்கியின் அனைத்துக் கிளைகளிலும் ரூ.2,000 நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்த அல்லது மாற்றிக் கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2023, அக்.9 முதல் ரிசா்வ் வங்கியின் 19 அலுவலகங்களிலும் ரூ.2,000 நோட்டுகள் பெறப்பட்டு வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.

இதுதவிர அஞ்சல் வழியாக பொதுமக்கள் அனுப்பும் ரூ.2,000 நோட்டுகளும் அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது