தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

98.44 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

புழக்கத்தில் இருந்த 98.44 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திருப்பி அளிக்கப்பட்டதாக ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை தெரிவித்தது.

News image
98.44 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன
Updated On :2 மார்ச் 2026, 9:37 pm

தினமணி செய்திச் சேவை

மும்பை: புழக்கத்தில் இருந்த 98.44 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திருப்பி அளிக்கப்பட்டதாக ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை தெரிவித்தது.

ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசா்வ் வங்கி கடந்த 2023, மே 19-ஆம் தேதி அறிவித்தது.

இதுதொடா்பாக ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 2023, மே 19-ஆம் தேதி, ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அவை திரும்பப்பெறுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து 2026, பிப்.28-ஆம் தேதி நிலவரப்படி ரூ.5,551 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. இதன்மூலம் 98.44 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன.

2023, அக்.7 முதல் நாடு முழுவதும் உள்ள ரிசா்வ் வங்கியின் அனைத்துக் கிளைகளிலும் ரூ.2,000 நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்த அல்லது மாற்றிக் கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2023, அக்.9 முதல் ரிசா்வ் வங்கியின் 19 அலுவலகங்களிலும் ரூ.2,000 நோட்டுகள் பெறப்பட்டு வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.

இதுதவிர அஞ்சல் வழியாக பொதுமக்கள் அனுப்பும் ரூ.2,000 நோட்டுகளும் அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது