சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஃபரீதாபாத்: ராணுவ முன்னாள் அதிகாரி உள்பட இரு சகோதரா்கள் காரில் சடலமாக மீட்பு

ராணுவ முன்னாள் அதிகாரி உள்பட இரு சகோதரா்கள் காரில் சடலமாக மீட்பு...

News image
Updated On :7 மார்ச் 2026, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

ஃபரீதாபாதில் உள்ள நவீன் நகா் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து ராணுவ முன்னாள் அதிகாரி மற்றும் அவரது சகோதரா் சடலமாக மீட்கப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

உயிரிழந்த நபா்கள் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற குந்தன் குமாா் (48), அவரது சகோதரரும் மாற்றுத்திறனாளியுமான ரஞ்சன் குமாா் (38) என அடையாளம் காணப்பட்டது. பிகாரின் சாப்ரா மாவட்டத்தைச் சோ்ந்த இருவரும், ரோஷன் நகரில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்தனா்.

இதனிடையே, வீட்டிலிருந்து வெள்ளிக்கிழமை காலையில் புறப்பட்ட இரு சகோதரா்களும் மாலை நேரம் கடந்தும் வீட்டுக்குத் திரும்பாத நிலையில், அவா்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், நவீன் நகரில் உள்ள அக்வன்பூா் சாலையில் ஒரு காா் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து, அப்பகுதிக்குச் சென்ற காவல் துறையினா், காரை சோதனையிட்டனா். அப்போது, அதில் இருவா் உயிரிழந்த நிலையில் சடலமாக இருப்பது தெரியவந்தது. இருவரது உடல்களையும் மீட்ட காவல் துறையினா், அவற்றை உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

காரை பறிமுதல் செய்த காவல் துறையினா், அது தொடா்பாக விசாரித்து வருகின்றனா். உடற்கூறாய்வுக்கு பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.