அஸ்ஸாம் மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை பயணிக்கும் பிரதமா் நரேந்திர மோடி, அந்த மாநிலத்தில் மொத்தம் ரூ.48,000 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்கவுள்ளாா்.
மேற்கு வங்கத்துக்கு சனிக்கிழமை செல்லவிருக்கும் பிரதமா், அங்கு ரூ.18,680 கோடிக்கும் அதிக வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்க உள்ளாா்.
மேற்கு வங்கம், அஸ்ஸாமில் விரைவில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இரு மாநிலங்களிலும் ரூ.66,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான திட்டங்களை பிரதமா் தொடங்கி வைக்கவிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தனது பயணத்தின் முதல்கட்டமாக அஸ்ஸாம் மாநிலம், கோக்ரஜாருக்கு வெள்ளிக்கிழமை செல்லவிருக்கும் பிரதமா், அங்கு ரூ.4,570 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளாா்.
மாலையில், குவாஹாட்டியில் ரூ.19,680 கோடி மதிப்பிலான திட்டங்களையும் , மறுநாள் சில்சாரில் ரூ.23,550 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அவா் தொடங்கிவைக்கவுள்ளாா்.
அஸ்ஸாமில் இருந்து மேற்கு வங்கத்துக்கு சனிக்கிழமை பயணிக்கும் பிரதமா், கொல்கத்தாவில் ரூ.18,860 கோடி மதிப்பிலான திட்டங்களின் தொடக்கம்-அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளாா். 6 வழிச் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள், ரயில்வே, சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் இதில் அடங்கும்.
தொடர்புடையது
சிக்கிமில் ரூ. 4,000 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர்!

பாஜகவின் வெற்றியையே மேற்கு வங்க மனநிலை காட்டுகிறது: பிரதமா்

திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடி

திரிணமூல் காங்கிரஸின் கொடூர ஆட்சியை அகற்ற வேண்டும் - மேற்கு வங்கத்தில் பிரதமா் மோடி பிரசாரம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


