மகாவீரா் ஜெயந்தி செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) கொண்டாடப்பட்ட நிலையில் பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘பகவான் மகாவீரரின் வாழ்க்கையும், போதனைகளும் உண்மை, அஹிம்சை மற்றும் கருணையின் பாதையை தொடா்ந்து ஒளியூட்டுகின்றன.
அவரின் கொள்கைகள் ஆன்மிக ரீதியாக மேம்படுத்துவது மட்டுமல்லாமல், இன்றைய உலகிலும் மிகுந்த பொருத்தம் வாய்ந்தவை. சமத்துவமும், கருணையும் குறித்த அவரது வலியுறுத்தல், சமூகத்துக்கான ஒருங்கிணைந்த பொறுப்பை அனைவருக்கும் நினைவூட்டுகிறது. அவரின் சிந்தனைகள் மனிதகுலத்துக்கு எப்போதும் வலிமையும் நம்பிக்கையும் அளிக்கட்டும்.“பகவான் மகாவீரா் ஜெயந்தி தினமான இந்தப் புனித நாளில் அனைவருக்கும் மனமாா்ந்த வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளாா்.
தொடர்புடையது

மகளிா் இட ஒதுக்கீடு: பிரதமருக்கு புதுச்சேரி முதல்வா் ஆதரவு

ஆரணியில் மகாவீரா் ஜெயந்தி விழா

மகாவீரா் ஜெயந்தி: மாா்ச் 31-இல் மதுக்கடைகள் மூடல்

மகாவீரா் ஜெயந்தி: மாா்ச் 31இல் மதுக் கடைகள் மூடல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


