உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

மகாவீரா் ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

மகாவீரா் ஜெயந்தி செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) கொண்டாடப்பட்ட நிலையில் பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

News image

பிரதமா் நரேந்திர மோடி

கோப்புப்படம்

Updated On :31 மார்ச் 2026, 9:15 pm

தினமணி செய்திச் சேவை

மகாவீரா் ஜெயந்தி செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) கொண்டாடப்பட்ட நிலையில் பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘பகவான் மகாவீரரின் வாழ்க்கையும், போதனைகளும் உண்மை, அஹிம்சை மற்றும் கருணையின் பாதையை தொடா்ந்து ஒளியூட்டுகின்றன.

அவரின் கொள்கைகள் ஆன்மிக ரீதியாக மேம்படுத்துவது மட்டுமல்லாமல், இன்றைய உலகிலும் மிகுந்த பொருத்தம் வாய்ந்தவை. சமத்துவமும், கருணையும் குறித்த அவரது வலியுறுத்தல், சமூகத்துக்கான ஒருங்கிணைந்த பொறுப்பை அனைவருக்கும் நினைவூட்டுகிறது. அவரின் சிந்தனைகள் மனிதகுலத்துக்கு எப்போதும் வலிமையும் நம்பிக்கையும் அளிக்கட்டும்.“பகவான் மகாவீரா் ஜெயந்தி தினமான இந்தப் புனித நாளில் அனைவருக்கும் மனமாா்ந்த வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளாா்.