மேற்கு வங்கத்திற்கு ஏப். 23, 29 என இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா 4 ஆவது முறையாக ஆட்சியமைக்க தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
பங்குரா, பச்சிம் மேதினிப்பூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் மமதா பானர்ஜி, மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார்.
"பாஜக ஒரு காட்டுமிராண்டித்தனமான கட்சி. நாடு முழுவதும் வங்க மொழி பேசும் புலம்பெயர்ந்தோரை குறிவைத்துத் தாக்குகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் வங்க மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர், தவறாக நடத்தப்படுகின்றனர்.
294 தொகுதிகளிலும் என்னை உங்கள் வேட்பாளராகக் கருதி வெற்றி பெறச் செய்யுங்கள். வங்க மக்களுக்கு தொடர்ந்து இந்த அரசு துணை நிற்கும்" என்று பேசினார்.
முன்னதாக, மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இங்குள்ள மக்கள், மீன் மற்றும் இறைச்சி உண்பதைத் தடுத்துவிடுவார்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல மேற்குவங்க வாக்காளர் பட்டியலில் வெளிமாநிலத்தவர்களைச் சேர்க்க பாஜகவினர் முயற்சித்து வருவதனாகவும் இதற்கு தேர்தல் ஆணையம் இணைந்து செயல்படுவதாகவும் கடுமையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
Summary
BJP is a barbaric party: Mamata Banerjee alleges torture of Bengali speaking migrants
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே.வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக 90 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளது! - மமதா குற்றச்சாட்டு!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
பாஜகவுக்கு தைரியமிருந்தால், நீக்கப்பட்டவர்களின் பட்டியலை வெளியிடட்டும்: மமதா பானர்ஜி

கொல்கத்தாவில் தரையிறங்க முடியாமல் தவித்த மமதாவின் விமானம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


