மேற்கு வங்கத்தில் தேர்தல் நேரத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதற்காக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மறுநாள், மே 5 ஆம் தேதி, வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர் ராஜீப் சர்க்கார் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
அந்தப் புகாரில், கடந்த ஏப்ரல் 27 முதல் மே 3 வரை நடைபெற்ற பல்வேறு தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகளில் அபிஷேக் பானர்ஜி, வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக புகார்தாரர் குற்றம் சாட்டினார்.
மேலும், அபிஷேக் பானர்ஜியின் இந்த கருத்துகள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொடர்புடையவை என்றும் புகார்தாரர் கூறியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விசாரணையின் ஒருபகுதியாக தேர்தல் நேரத்தில் அவர் பேசிய கருத்துகள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, 294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் 207 தொகுதிகளைக் கைப்பற்றியதன்மூலம் 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை பாஜக முடிவுக்குக் கொண்டு வந்து ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.
Summary
A case has been registered against Trinamool Congress MP Abhishek Banerjee for making remarks aimed at inciting violence during the elections in West Bengal.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டவா் கைது
மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை


