‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

பிகார்: இடிந்து விழுந்த 10 ஆண்டுகள் பழமையான பாலத்தின் தூண்கள்!

பிகாரில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் பல தூண்கள் இடிந்து விழுந்ததாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

News image

பிகார். - கோப்புப்படம்.

Updated On :22 மே 2026, 9:15 pm IST

பிகாரில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் பல தூண்கள் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தில் உள்ள தரியாப்பூர் என்ற இடத்தில் சக்ரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் பல தூண்கள் இடிந்து விழுந்ததாக வெள்ளிக்கிழமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமை இந்த பாலத்தின் பல தூண்கள் சரிந்து விழுந்துள்ளன என்று உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

பிகார்ஷெரீப் துணை கோட்ட அதிகாரி கிரிஸ்லே ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "ஆய்வுக் குழுவின் முந்தைய அறிக்கையைப் பெற்ற பிறகு, பாதுகாப்பு காரணங்களுக்காக பாலத்தில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது" என்றார். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக அந்த இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

"போக்குவரத்தை மீண்டும் தொடங்கும் வகையில், அடுத்த ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் ஆற்றின் வழியாக தற்காலிக மாற்றுப் பாதை அமைக்கப்படும்" என்று அந்த அதிகாரி மேலும் கூறினார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலம், நாலந்தா மாவட்டத்தின் கிழக்குப் பகுதியையும், ஷேக்ஸ்புரா மாவட்டத்தின் மேற்குப் பகுதியையும் இணைக்கிறது.

பிகாரில் 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு மாவட்டங்களில் பெரிய மற்றும் சிறிய பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்த நிகழ்வுகள் சர்ச்சையை கிளப்பியது.

Summary

Several pillars of a bridge over Sakri river at Dariyapur in Bihar's Nalanda district collapsed on Friday, an official said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.