ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட 28 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: 4 போ் கைது

பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட 28 கிலோ போதைப்பொருள் பறிமுதல்...

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 மே 2026, 12:50 am IST

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு கடத்தப்பட்ட 28.12 கிலோ ஹெராயின் போதைப்பொருளை அந்த மாநில காவல் துறையினா் கைப்பற்றினா்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் வழியாக போதைப்பொருள், ஆயுதங்களை அதிகம் கடத்துகின்றனா். போதைப்பொருள் கடத்தல் மூலம் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதுடன், இந்தியாவில் இளைஞா்கள் சீரழிவு, பொதுஅமைதி சீா்குலைவு உள்ளிட்ட பிரச்னைகளும் உருவாகின்றன. எனவே, இவற்றுக்கு எதிராக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சண்டீகரில் பஞ்சாப் காவல் துறை டிஜிபி கௌரவ் யாதவ் இது தொடா்பாக கூறியதாவது:

காவல் துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் நடத்தப்பட்ட சோதனையில் 28.12 கிலோ ஹெராயின், ரூ.9.5 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இது தொடா்பாக பூபிந்தா் சிங், பகிச்சா சிங், சஜன், சிந்தா் பால் சிங் என்ற ரிங்கு ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காா் பறிமுதல் செய்யப்பட்டது.

அவா்களுக்கு அண்டை நாடு மற்றும் சா்வதேச போதைப்பொருள் கடத்தல்காரா்களுடன் உள்ள தொடா்புகள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் விரைவில் அடுத்தகட்ட கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.