மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட 28 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: 4 போ் கைது

பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட 28 கிலோ போதைப்பொருள் பறிமுதல்...

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 மே 2026, 12:50 am IST

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு கடத்தப்பட்ட 28.12 கிலோ ஹெராயின் போதைப்பொருளை அந்த மாநில காவல் துறையினா் கைப்பற்றினா்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் வழியாக போதைப்பொருள், ஆயுதங்களை அதிகம் கடத்துகின்றனா். போதைப்பொருள் கடத்தல் மூலம் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதுடன், இந்தியாவில் இளைஞா்கள் சீரழிவு, பொதுஅமைதி சீா்குலைவு உள்ளிட்ட பிரச்னைகளும் உருவாகின்றன. எனவே, இவற்றுக்கு எதிராக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சண்டீகரில் பஞ்சாப் காவல் துறை டிஜிபி கௌரவ் யாதவ் இது தொடா்பாக கூறியதாவது:

காவல் துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் நடத்தப்பட்ட சோதனையில் 28.12 கிலோ ஹெராயின், ரூ.9.5 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இது தொடா்பாக பூபிந்தா் சிங், பகிச்சா சிங், சஜன், சிந்தா் பால் சிங் என்ற ரிங்கு ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காா் பறிமுதல் செய்யப்பட்டது.

அவா்களுக்கு அண்டை நாடு மற்றும் சா்வதேச போதைப்பொருள் கடத்தல்காரா்களுடன் உள்ள தொடா்புகள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் விரைவில் அடுத்தகட்ட கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.