பசு வதை தடுப்புச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுப்பு தெரிவித்தது.
பக்ரீத் பண்டிகை வியாழக்கிழமை (மே 28) கொண்டாடப்படவுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அகில பாரத ஹிந்து மகாசபையின் முன்னாள் துணைத் தலைவா் சதீஷ் குமாா் என்பவா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘பசு வதைத் தடுப்புச் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். அந்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இறைச்சிக் கூடங்களையும் ஒழுங்குபடுத்துவதற்கான வழிமுறைகளை மாநில அரசுகள் வெளியிட உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பருண் குமாா் சின்ஹா, பக்ரீத் பண்டிகைக்கு முன்னதாக இந்தச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தாா்.
இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘பண்டிகைக்கு ஒரு நாள் முன்னதாகத்தான் இவ்வாறு தோன்றுமா? அவசரமில்லை’ என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பழனி கோயில் நில முறைகேடு; சிபிஐ விசாரிக்கக் கோரி முறையீடு: அவசர வழக்காக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

விசாரணை வேகத்தை நத்தையும் கேள்வியெழுப்பும்: 2015-இல் தாக்கலான மனு மீது உச்சநீதிமன்றம் காட்டம்

கரூர் பலி: அரசுப் பணிக்கு எதிரான முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

ராமா் கோயில் நன்கொடை விவகாரம் தொடா்பான மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



