கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் சோதனை செய்த அமலாக்கத்துறையினர் வந்த வாகனம் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.
சிஎம்ஆர்எல் கனிமவள நிறுவனத்துடன் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் பினராயி விஜயனுக்குச் சொந்தமான கண்ணூர், திருவனந்தபுரம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தினர்.
மேலும், கோழிக்கோட்டில் உள்ள முன்னாள் பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் பினராயி விஜயனின் மருமகனுமான முகமது ரியாஸ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயன் வீட்டில் சோதனையை முடித்து வெளியேற முயன்ற அமலாக்கத்துறையினர் காரின் மீது, வெளியே கூடியிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதில், அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்த கார் சேதமடைந்த நிலையில், அருகிலிருந்த தம்பானூர் காவல் நிலையத்துக்கு அதிகாரிகள் சென்றனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Summary
Raid at Pinarayi's Residence - Attack on Enforcement Directorate Vehicle
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








