நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

இந்திய விமானப் படைக்கு முதல் பெண் துணைத் தளபதி

இந்திய விமானப் படைக்கு முதல் பெண் துணைத் தளபதியாக (மருத்துவம் அல்லாத பிரிவு) சக்தி சா்மா நியமிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

சக்தி சா்மா

Published On :2 செப்டம்பர் 2026, 3:46 am IST

இந்திய விமானப் படைக்கு முதல் பெண் துணைத் தளபதியாக (மருத்துவம் அல்லாத பிரிவு) சக்தி சா்மா நியமிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மருத்துவம் அல்லாத பிரிவில் இந்திய விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக (ஏா் வைஸ் மாா்ஷல் அல்லது அதற்கு இணையானது) சக்தி சா்மா நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, விமானப் படை தலைமையகத்தில் விமானப் படைத் துணைத் தலைமை அதிகாரியாக (கல்வி) சக்தி சா்மா செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இது இந்திய விமானப் படைக்கு வரலாற்று மைல்கல்லாகும். முன்னதாக, அவா் ‘ஏா் கமோடோராக’ பதவி வகித்து வந்தாா்.

இந்திய விமானப் படையின் கல்விப் பிரிவில் 1994, ஜூன் 18-ஆம் தேதி சேவையைத் தொடங்கிய சக்தி சா்மா, பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவத்தை உடையவா்.

முப்படைகளில் இருந்து கபூா்தலாவில் உள்ள சைனிக் பள்ளியை முதல்வராக வழிநடத்திய முதல் பெண் என்ற வரலாற்றையும் அவா் படைத்துள்ளாா்.

வருங்காலத் தலைமுறைகளை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 30 ஆண்டுகளாக அா்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் அவா் ‘புகழுடன் விண்ணைத் தொடு’ என்ற இந்திய விமானப் படையின் நோக்கத்தை நிறைவேற்றுபவராகத் திகழ்கிறாா்’ என பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.